கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கவும் – அதிபர் கருணைலிங்கம் அறிவிப்பு!
Friday, January 13th, 2017
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் 2016,2017 ஆம் கல்வியாண்டு பயிற்சிக்காக விண்ணப்பிப்போர் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டுமென கலாசாலை அதிபர் வீ.கருணைலிங்கம் கேட்டுள்ளார்.
இதற்காக விண்ணப்பிக்கும் படிவங்களை கோப்பாய் ஆசிரியர் கலாசாலையுடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் ஜீலை மாதத்துக்கு ஏற்கனவே பயிற்சி பெற்றுள்ள உள்ளக மாணவர்கள் விடை பெற்றுச் செல்வதுடன் புதிய மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் தற்போது 337 பேர் பயிற்சி பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
தனியார் கல்வி நிறுவனங்களிடம் தேர்தல் ஆணைக்குழு வேண்டுகோள்!
பங்களாதேஷ் பயணமானார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச!
நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட மாட்டோம் - இது நாட்டை சீர்குலைக்கும் முயற்சி - சுயாதீனமாக ச...
|
|
|


