கொரோனா மூன்றாம் அலை ஏற்படும் அபாயம் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!
Sunday, March 14th, 2021கொரோனா மூன்றாவது அலை ஏற்படக்கூடிய அபாய நிலை காணப்படுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பண்டிகைக் காலத்தில் உரிய சுகாதார விதிமுறைகளை பின்பற்ற தவறினால் கொரோனா தொற்று அதிகரிக்கக்கூடும் என சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 526 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 281 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டதை அடுத்து, நாட்டில் இதுவரை 87,600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நல்லூர் தேர்திருவிழாவை விடுமுறை நாளாகப் பிரகடனப்படுத்துமாறு கோரிக்கை!
கோத்தபாய ராஜபக்ஷ சவிஷேட மேல் நீதிமன்றில் ஆஜர்!
திங்கள்முதல் நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைளும் முழுமையாக ஆரம்பம் - புதிய சுக...
|
|