கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு – அச்சம் இல்லை என்கிறது மருத்துவத்துறை!

Thursday, April 16th, 2020

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்ட மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதை அடுத்து இலங்கையில் கொரோனா  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 63 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தற்போது 165 பேர்  கொழும்பு ஐ டி எச் வைத்தியசாலையிலும், வெலிகந்த மற்றும் முல்லேரியா ஆதார வைத்திய சாலைகளில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அதேபோல் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் 200 க்கும் அதிகமானவர்கள் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: