கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 92,442 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 139 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 92 ஆயிரத்து 442 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் 89 ஆயிரத்து 90 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 2 ஆயிரத்து 786 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேநேரம், நாட்டில் பதிவாகியுள்ள மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 566 ஆகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
காணாமல் போயிருந்த மீனவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக அறிவிப்பு!
சகல வெள்ளிக்கிழமைகளிலும் அரச சேவையாளர்களுக்கு விடுமுறை வழங்க யோசனை - அமைச்சர் தினேஷ் குணவர்தன தகவல்!
இலங்கையில் அரசியல் குழப்பம் - தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சுவிஸ் அரசாங்கம் தனது மக்களுக்கு அறி...
|
|