கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 178ஆக உயர்வு – சுகாதார பிரிவு!

Tuesday, April 7th, 2020

இலங்கையில் கொரோன வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 178ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று மாலை மேலும் இரண்டு புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

178 கொரோனா தொற்றாளர்கள் இனங்கண்ட போதிலும் 34 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். 137 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கையில் கொரோனா தொற்றாளர்களில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: