குவைட்டில் இலங்கையர்களுக்கு அதிகளவு தொழில் வாய்ப்பு!

Friday, March 2nd, 2018

அதிகளவு இலங்கையர்கள் குவைட்டில் துறை சார்ந்த நிபுணர்களுக்கான தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சின் தகவல்களைமேற்கோள்காட்டி அல் அன்பா டெய்லி என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

குவைட் சுகாதார அமைச்சு வெளிநாட்டவர்களுக்கு 2 ஆயிரத்து 140 தொழில் வாய்ப்புகளை உருவாக்குமாறு அந்த நாட்டின் சிவில் சேவைகள் ஆணைக்குழுவிடம் கோரியுள்ளது.

அதன்படி வைத்தியர்கள் தாதியர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் ஆகிய துறைசார் நிபுணர்கள் விரைவில் உள்ளீர்க்கப்படவுள்ளனர்.

இதன்போது இலங்கை இந்தியா சிரியா பங்களாதேஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts:

மக்களின் பணத்தை சூறையாடும் கூட்டமைப்பின் கம்மரெலிய தரகர் தர்சானந்த் – அதிர்ச்சியில் யாழ் மாநகர மக்கள...
மக்களின் அமைதியான வாழ்க்கையை பாதுகாக்கவே ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது – இருநாள் ஊடரங்கு ...
சீன மக்களினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகள் யாழ் மாவட்ட மக்களுக்கு வ...