குறைநிரப்பு பிரேரணைஅமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவினால் முன்வைப்பு!

Tuesday, June 22nd, 2021

கொவிட்- 19 ஒழிப்புக்கான 200 பில்லியன் ரூபா குறைநிரப்பு பிரேரணை இன்று (22) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தப் பிரேரணை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இது தொடர்பில் நாளை (23) நாடாளுமன்றில் விவாதிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதாக நாடாளுமன்ற அமர்வுகள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்றையதினம் இடம்பெற்றன.

இந்த வாரத்திற்கான நாடாளுமன்ற அமர்வை இன்று மற்றும் நாளை  ஆகிய இரு தினங்களுக்கு மட்டுப்படுத்த நேற்று இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய இன்றைய அமர்வில் இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபன திருத்தச் சட்டமூலம் மற்றும் காணி எடுத்தல் சட்டத்தின் கீழுள்ள ஒழுங்கு விதிகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதேநேரம், கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள 200 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு பிரேரணை நாளையதினம் நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: