காணாமல்போனோர் விவகாரத்தை அரசியலாக்கக் வேண்டாம் – யாழ்ல் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்து!

காணாமல்போனோர் தொடர்பான விடயத்தை ஊடகங்களில் கருத்து தெரிவித்து, அரசியலாக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ள இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், அரச தரப்பும் இணைந்து கிரமமான தீர்வை இதற்கு காணவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – வடமராட்சியில், சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்விடயம் குறித்து நீண்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று பல ஆண்டுகள் ஆகின்றன. அதேபோன்று, 1988, 89 மற்றும் 83 முதலான காலப்பகுதிகளில் காணாமல்போனோர்கள் குறித்து, தெற்கிலும் தொடர்ந்து பேசப்படுகிறது. இது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள வேண்டும்.
அதேநேரம் பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் மிகவும் உணர்வுபூர்வமான விடயம் இதுவாகும். எனவே, இது குறித்து ஊடகங்கள் மூலமாக கருத்து தெரிவித்து, இதனை அரசியலாக்காமல் இருக்க வேண்டும்.
எனவெ இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், அரச தரப்பும் இணைந்து கிரமமான தீர்வை இதற்கு காண வேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேநேரம், தமது தந்தையை விடுதலை செய்யுமாறு, தமிழ் கைதியான ஆனந்த சுதாகரனின் மகனும், மகளும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|