காணாமற்போன நெடுந்தீவு மீனவர் வேதாரணியம் கடற்கரையில் சடலமாக மீட்பு!
Wednesday, July 7th, 2021ஒரு வாரமாக காணாமற்போன நெடுந்தீவு மீனவர், தமிழகம் வேதாரணியம் கடற்கரையில் இன்று புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று தமிழக செய்திகள் தெரிவித்துள்ளன..
நெடுந்தீவு 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சில்வஸ்டார் மரியதாஸ் என்ற மீனவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த முதலாம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10 மணியளவில் நெடுந்தீவு கடற்கரையிலிருந்து கட்டுமரம் ஒன்றில் அவர் தொழிலுக்குச் சென்றுள்ளார்.
எனினும் அவர் கடந்த ஒருவாரமாக கரை திரும்பவில்லை என்று குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.
அவரது சடலம் தமிழகம் வேதாரணியம் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ள நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாகாண சபை தேர்தல்: விசேடமாக தயாரிக்கப்பட்ட வாக்குச் சீட்டு!
சட்டமா அதிபர் திணைக்களத்தின் புதிய அலுவலக கட்டடத் தொகுதிபிரதமரினால் திறந்து வைப்பு!
பலாலி விமான நிலைய காணி சுவீகரிப்பு - உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்!
|
|