களனிதிஸ்ஸ மின்பிறப்பாக்கி மீண்டும் தேசிய மின் கட்டமைப்பில் இணைப்பு!
Sunday, February 13th, 2022
270 மொகாவொட் மின்சார உற்பத்தி இடம்பெறுகின்ற கெரவலப்பிட்டி மின்னுற்பத்தி நிலையத்தின் மேற்கு முனையம் தொழிநுட்ப கோளாறு காரணமாக நேற்றிரவு செயலிழந்துள்ளது.
அதேநேரம், 130 மொகாவொட் மின்சார உற்பத்தி இடம்பெறுகின்ற, களனிதிஸ்ஸ சொஜிஸ்ட் மின்னுற்பத்தி நிலைய மின் பிறப்பாக்கியும் நேற்று செயலிழந்தது.
இதன் காரணமாக, நாட்டின் பல பாகங்களில் குறுகிய கால மின் துண்டிப்பு எதிர்பார்க்கப்பட்டதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க நேற்றிரவு தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும், செயலிழந்திருந்த களனிதிஸ்ஸ சொஜிஸ்ட் மின்னுற்பத்தி நிலைய மின்பிறப்பாக்கி, நேற்றிரவு புனரமைக்கப்பட்டு தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
ஆணைக்குழுவில் சாட்சியமளித்தவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் சில வேட்பாளர்களுக்கு அநீதி இழைக்கின்றது ...
நாட்டின் 50 சதவீதமானோருக்கு கொவிட் தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளன - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜ...
சேவையிலிருந்து நீக்கப்பட்ட 50 சொகுசு ரக பேருந்துகள் எதிர்வரும் 6 மாதங்களில், மீண்டும் சேவையில் ஈடுபட...
|
|
|


