கல்வியில் ஏற்படும் புரட்சியிலேயே நாடும் வளர்ச்சி பெறும் – கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்!
Saturday, March 18th, 2017எந்தவொரு நாடும் வளர்ச்சியடைந்தமைக்குக் காரணம் கல்வியில் ஏற்பட்ட புரட்சியேயாகும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதனால் நாட்டின் அபிவிருத்திக்கு கல்விக் கட்டமைப்பு வலுப்படுத்தப்படுவதன் தேவையையும் அமைச்சர்; சுட்டிக்காட்டியுள்ளார். இதற்குத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கல்வியமைச்சின் கேட்போர் கூடத்தில் சமீபத்தில் இடம்பெற்ற நியமனங்களை வழங்கும் வைபவத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார.; கட்சித் தராதரம், தனிநபர் அரசியல் கட்சி நிகழ்ச்சி நிரல் ஆகியவற்றைப் புறந்தள்ளி நீதியான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் தற்போதைய அரசாங்கம் முன்நின்று செயற்படுகிறது என்றும் அவர் கூறினார்.
Related posts:
பொய்க்குற்றச்சாட்டு எனக் கூறி கொக்குவில் இந்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
”டெல்டா பிளஸ்” திரிபு வைரஸ் குறித்தும் அச்சப்படுகிறோம் - மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!
டெல்டா உள்ளிட்ட புதிய வைரஸ்கள் எதிர்வரும் நாட்களில் மேலும் தீவிரமடையும் : இராஜாங்க அமைச்சர் பேராசிரி...
|
|