கல்வியமைச்சருக்கு எதிரான முறைப்பாட்டை விசாரணை செய்ய தீர்மானம்!

Friday, March 8th, 2019

2015/2018 காலப்பகுதியில் ஊழல் மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை குழுவிடம் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ முன்வைத்த முறைப்பாடு குறித்து விசாரணைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் சுரக்ஷா காப்புறுதி யோசனை முறைமை மூலம் மாணவர்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படவில்லை என அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக 2300 மில்லியன் ரூபா விரயமாகியுள்ளதாக அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் 2018 ஆம் ஆண்டு 29 மில்லியன் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதுடன் அதில் அமைச்சரின் புகைப்படம் மற்றும் வாழ்த்து செய்தி வெளியீடு மூலம் பொதுமக்களின் பணம் முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இதுதவிர பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர் முறைமை காரணமாக மேலதிகமாக 538 மில்லியன் ரூபா ஒதுக்க நேரிட்டதாகவும் அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, 2015/2018 காலப்பகுதியில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குவிற்கு இதுவரை 522 முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: