கணக்குகள் பற்றிய குழு உருவாக்கப்பட்டு இன்றுடன் 100 ஆண்டுகள் பூர்த்தி!

அரசாங்க கணக்குகள் பற்றிய குழு உருவாக்கப்பட்டு இன்றுடன் 100 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
இது தொடர்பில், நாடாளுமன்றில் இன்றையதினம் சபை ஒத்திவைப்பு விவாதம் இடம்பெற்றதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்ட முதலாவது நிதி கண்காணிப்புக் குழுவாக அரசாங்க கணக்குகள் பற்றிய குழு கருதப்படுகிறது.
ஐ.ஆர்.தம்பிமுத்துவினால் சட்டவாக்கப் பேரவையில் 1921 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முன்வைத்த பிரேரணைக்கு அமைய அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
தமிழ் மக்கள் தொடர்பில் கோத்தபாய ராஜபக்ச வழங்கிய உறுதி மொழி!
கொரோனா வைரஸ் தெற்றின் ஆதிக்கம் உச்சம் – உலகளவில் இதுவரை 2 இலட்சத்தை கடந்த உயிரிழப்புகள் - உலக சுகாத...
2022 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பம்!
|
|