கடும் காற்று : திருகோணமலை மாவட்டத்தில் 18 வீடுகள் சேதம் – மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் தகவல்!

Friday, May 28th, 2021

திருகோணமலை மாவட்டத்தில் வீசிய கடும் காற்று காரணமாக 18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் குணதாஸ் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் திருகோணமலை மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 3 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக கந்தளாய் பிரதேசத்தில் 5 வீடுகளும், சேருவில பிரதேசத்தில் 8 வீடுகளும், குச்சவெளி பிரதேசத்தில் மூன்று வீடுகளும் தம்பலகாமம் பிரதேசத்தில் இரண்டு வீடுகளும், சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் 18 குடும்பங்களைச் சேர்ந்த 73 உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: