கடவுச்சீட்டு பெறவுள்ள மக்களுக்கான வசதிகளை விரிவுபடுத்தியது குடிவரவு குடியகல்வு திணைக்களம்!
Tuesday, February 28th, 2023மக்களுக்கு மிகவும் வினைத்திறனான சேவையை வழங்குவதையும், கூடுதலான வசதிகளை அளிப்பதையும் நோக்கமாக கொண்டு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பொது மக்கள் தகவல் கேந்திர நிலையத்தின் நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் 0112 101 500 அல்லது 0112 101 600 ஆகிய தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொண்டு மக்கள் தமது சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
குறித்த தொலைபேசி இலக்கத்தின் வாயிலாக ஒரே நேரத்தில் 30 பேர் இந்த நிலையத்துடன் தொடர்பு கொள்ளக்கூடிய மற்றும் குறுந்தகவல்கள் மூலம் போதியளவு விபரங்களை பெற்றுக்கொள்வதற்கான வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
காலை 8.00 மணி முதல் மாலை 4.45 வரை இந்த வசதிகளை பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
000
Related posts:
பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!
சுழிபுரத்தில் கோரூரம் - 6 வயது சிறுமி கழுத்து நெரித்து படுகொலை!
சுகாதார தரப்பினரின் விதிகளை பின்பற்றி மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதிக் கிரியைகள் முன்னெட...
|
|