கடல் கொந்தளிக்கலாம் : கரையோர பகுதி மக்களே எச்சரிக்கை!
Sunday, May 15th, 2016இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற தன்மை தொடர்ந்தும் வலுப்பெற்று வருவதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால் நாடு முழுவதிலும் இதன் தாக்கம் அதிகரித்து காணப்படும் என காலநிலை அவதான நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் நாட்டின் கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவித்துள்ளதுடன் இதனால் கடல் கொந்தளிப்பானது சற்று அதிகரித்து இருக்கும் என தெரிவித்துள்ளது.
இதேவேளை, அசாதாரண காலநிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் அதிக பனிமூட்டம் படர்ந்துள்ளதாகவும் ஹப்புத்தளை, பெரகல, அடம்பிட்டிய, மடுல்சீமை, ஆகிய பகுதிகளிலேயே அதிக பனிமூட்டம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
வெள்ளியன்று புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம்?
கடன் சலுகை பெற்றுக் கொண்டவர்களது தகவல்களை வழங்குமாறு இலங்கை கொடுகடன் தகவல் பணியகம் அனைத்து வங்கிகளிட...
நாம் ஆட்சிக்கு வந்தது கொழும்பிலிருந்து ஆட்சி செய்வதற்கல்ல – கிராம மக்களிடம் சென்று அவர்களின் தேவைகளை...
|
|