கடந்த 42 நாள்களில் 1,310 கிலோ போதைப்பொருள் கைப்பற்றல்!

Saturday, February 16th, 2019

இவ்வருடத்தின் கடந்த 42 நாள்களில் மாத்திரம் போதைப்பொருளுடன் 10 ஆயிரத்து 368 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சந்தேகநபர்களிடமிருந்து 1,310 கிலோ கிராம் போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களில் பலர் பாதாள உலகக் கோஷ்டியுடன் தொடர்புபட்டவர்கள் எனப் பொலிஸார் கூறியுள்ளனர்.

இவ்வாறு கைதான சந்தேகநபர்களில் 9 பேர் வெளிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: