கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 28 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி!

Monday, June 21st, 2021

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்  2 ஆயிரத்து 28 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது. அவர்களில் 20 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 39 ஆயிரத்து 689 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் ஆயிரத்து 996 பேர் நேற்று குணமடைந்தனர். தொற்று உறுதியானவர்களில் இதுவரையில் 2 இலட்ச்த்த ஆயிரத்து 389 பேர் குணமடைந்துள்ளனர்.

அத்துடன், தொற்று உறுதியான 35 ஆயிரத்து 766 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த 27 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 37 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 585 பேருக்கு நேற்று பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 37 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் 27 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 02 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 07 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: