கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!
Thursday, June 10th, 2021
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய ஆயிரத்து 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இன்றையதினமும் நாட்டின் பல இடங்களில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு நகரில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறுவோரை அடையாளம் காண்பதற்காக ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலத்தில் போதைப் பொருட்களுடன் கைதாகின்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பித்தக்கது.
Related posts:
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ள விசேட அறிக்கை!
நாட்டின் சில பிரதேசங்களில் மழை பெய்யும் சாத்தியம் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!
நாடாளுமன்றத்தில் பெரும்பாலான நேரம் வீண் விரயமாக்கப்படுகின்றது - ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் பி...
|
|
|


