கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 995 பேர் கைது!
Sunday, June 6th, 2021கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 995 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்
அவர்களில் அதிகமானோர் மாத்தளை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய மாத்தளை மாவட்டத்தில் நேற்றையதினம் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 138 பேர் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி பிரதேசத்தில் 129 பேரும், நிக்கவரட்டிய பிரதேசத்தில் 75 பேரும் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
2024 இற்குள் அனைவருக்கும் நீர் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் பிரதமர்.
கர்ப்பிணிகள் - பாலூட்டும் தாய்மார்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்க அனுமதி - மகப்பேற்று வைத்தியர்கள் ஆய...
இலங்கையுடன் உடன்படிக்கைக்கு வர மீண்டும் பேச்சுவார்த்தை - சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு!
|
|