கடந்தகால போர்களை போலவே ஹமபஸ் – இஸ்ரேல் போரிலும் வெகுவாக பாதிக்கப்படுவது குழந்தைகளே – யுனிசெஃப்பின் நிரைவேற்று அதிகாரி கத்தரின் ரசல் சுட்டிக்காட்டு!
Tuesday, October 10th, 2023காசாவில் மோதல் நடைபெற்றுவரும் பகுதியில் மனிதாபிமான நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதாக யுனிசெப் அறிவித்துள்ளது.
இது குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு உயிர்காக்கும் சேவைகள் மற்றும் பொருட்களைக் கொண்டு வருவதற்கு தடங்கலாக இருப்பதாகவும் கூறியுள்ளது.
அனைத்து போர்களை போலவே இந்த போரிலும் வெகுவாக பாதிக்கப்படுவது குழந்தைகளே என்றும் யுனிசெஃப்பின் நிரைவேற்று அதிகாரி கத்தரின் ரசல் சுட்டிக்காட்டியுள்ளார்.
மின்சாரத்தைத் துண்டிப்பது, உணவு, எரிபொருள் மற்றும் நீரை காசாவுக்குள் கொண்டு செல்வதை தடுப்பது குறித்து ஆழ்ந்த கவலை அடைவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மீண்டும் புகையிரத பணியாளர்கள் சேவைப் பணிப்புறக்கணிப்பு!
மரணித்த உறவுகளுக்கு வேலணை பிரதேச சபையில் அஞ்சலி மரியாதை!
வாடிக்கையாளர்களின் இணைப்புகளைத் துண்டிக்க வேண்டாம் - தொலைபேசி நிறுவனங்களுக்கு அரசாங்கம் ஆலோசனை!
|
|