கசிப்பு உற்பத்தி அதிகரிப்பு :கொடிகாமம் பொலிஸார்!
Sunday, December 2nd, 2018தென்மராட்சி கிழக்கு கெற்பேலிப் பகுதியில் அண்மைக்காலமாக கசிப்பு உற்பத்தி அதிகரித்துள்ளதென கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
கெற்பேலிப் பகுதியில் 7 ஆயிரத்து 500 மில்லிலீற்றர், 750 மில்லிலீற்றர், ஆயிரத்து 500 மில்லி லீற்றர் கசிப்பை உடைமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் மூவரையும் பற்றை மறைவில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிறுவனொருவனும் கைது செய்யப்பட்டு கடந்த 28 ஆம் திகதி புதன்கிழமை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்கள் நால்வரும் தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியான பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே கொடிகாமம் பொலிஸார் இவ்வாறு குறிப்பிட்டனர்.
Related posts:
மாகாண சபை தேர்தல் தொடர்பில் பிரதமர் தலைமையில் இறுதித்தீர்மானம் - எதிர்வரும் 19 ஆம் திகதி கட்சித்தல...
நாடாளுமன்றம் செல்கிறது ஓய்வு பெறும் வயதைக் குறைப்பது தொடர்பிலான பிரேரணை!
நாட்டில் நிலவும் வரட்சியான நிலை இன்றிலிருந்து மாற்றம் - கிழக்கு, வடக்கு மாகாணங்களில் மழை பெய்யும் என...
|
|