ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டாம் – அமைச்சர் மங்கள வேண்டுகோள்!

Wednesday, November 23rd, 2016

இனங்களுக்கு இடையிலான ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுமாறு, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்களை திசை திருப்பும் கருத்துக்களை முன்வைத்து, சர்வதேசத்தினரிடையே இலங்கைக்குள்ள நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த வங்குரோத்து அரசியல்வாதிகள் சூழ்ச்சி செய்வதாக மங்கள சமரவீர குறிப்பிட்டார்.

நாட்டில் பல வருடங்களாக சகவாழ்வுடன் இருந்த முஸ்லிம் – சிங்கள மக்களுக்கு இடையே இன்று பல்வேறு மோதல்களை ஏற்படுத்தும் சூழ்ச்சி இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நீலப் படையணியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் ஆதரவாளர் ஒருவர், முஸ்லிம் மக்களுக்கு எதிரான, மோசமானதொரு சக்தியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டமையால், அவரை கைது செய்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர்,
பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என்ற அடிப்படையில், இந்த நாட்டிற்குள் இனங்களிடையே ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

managala-un-575-01

Related posts: