ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனைக்கு – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!
Monday, August 14th, 2023ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், நாளை மறுதினம் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 90 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,
182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 50 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 40 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையில் காணாமல்போன சிறுவர்களின் எண்ணிக்கை தொடர்பில் ஐ.நாவில் குழப்பம்!
7 மாதத்தில் 154 யானைகள் பலி!
அதிகரிக்கும் வீதி விபத்துக்கள் – யாழ். ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நாளை மீண்டும் ஆராயப்படும் -...
|
|