ஒமிக்ரோன் கொரோனா பிறழ்வின் தீவிரம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு வருகின்றது – வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவிப்பு!

Tuesday, November 30th, 2021

ஒமிக்ரோன் கொரோனா பிறழ்வின் தன்மை மற்றும் அதன் தீவிரம் தொடர்பிலான தகவல்களை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு உயிரியல் துறையின் தலைவரான வைத்தியர். சந்திம ஜீவந்தர தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த பிறழ்வு தொடர்பில் ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்டதாகவும் அவர் விவரித்துள்ளார்.

மேலும் டெல்டா உட்பட ஏனைய வகைகளுடன் ஒப்பிடுகையில், ஒமிக்ரோன் அதிகமாக பரவக்கூடியதா?, ஒருவரிடமிருந்து மற்றுமொருவருக்கு எளிதில் பரவுகிறதா? என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை எனவும் அவரது ட்வீட் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

புதிய பிறழ்வின் நோயின் தீவிரத் தன்மையை பொறுத்தவரை, டெல்டா உள்ளிட்ட பிற வகைகளுடன் ஒப்பிடும்போது ஒமிக்ரோன் தொற்று மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்துமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் புதிய பிறழ்வின் தாக்கம் தொடர்பில் கண்டறிய சோதனையின் செயற்திறனை அதிகரிக்க வேண்டும் என்பதுடன் ஏனைய பிறழ்வுகளை கண்டறிவதற்காக பயன்படுத்தும் பிசிஆர் சோதனைகளின் ஊடாக ஒமிக்ரோன் பிறழ்வினையும் கண்டறிய முடியும்.

அந்தவகையில் விரைவான என்டிஜென் கண்டறிதல் சோதனைகள் உட்பட பிற வகை சோதனைகளின் ஊடாக இதன் தாக்கத்தை மதிப்பிடுவதற்கான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: