ஏப்ரல் 21 தாக்குதல் விவகாரம் : வெளிநாடுகளில் கைதான நால்வரை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை!
Monday, March 15th, 2021ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் வெளிநாடுகளில் கைதுசெய்யப்பட்டுள்ள மேலும் நான்கு இலங்கையர்களையும், நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
முன்பதாக ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 5 நாடுகளில், 54 இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் 50 பேர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஏனைய நான்கு இலங்கையர்களையும், நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மரபணு ஆய்வுகூட வசதிகளை மேம்படுத்த 500 மில்லியன் ரூபா உதவி
இதய நோயாளர்களுக்கு மருந்து இறக்குமதி செய்ய அரசு திட்டம்!
கடந்த காலத்தில் காணப்பட்ட ஒற்றுமையின் உணர்வை நிகழ்காலத்திற்கு கொண்டுவந்தால் நாம் மீண்டும் உலகக் கிண்...
|
|