எல்லைதாண்டி மீன்பிடித்த நான்கு இந்திய மீனவர்கள் கைது!
Tuesday, August 9th, 2016அனலைத்தீவினை அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நான்கு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (09) அதிகாலை இவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது கைது செய்ப்பட்டதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி கூறினார்.
தமிழகத்தின் ஜெகதாப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட மீனவர்கள் தற்போது காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்திய மீனவர்களிடமிருந்து ட்ரோலர் படகொன்றும் மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கடற்படையினரின் விசாரணைகளின் பின்னர் இந்திய மீனவர்கள், யாழ். கடற்றொழில் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
Related posts:
கிழக்கு மாகாண மக்களது நலன்களை விட்டுக்கொடுக்காது அக்கறையுடனேயே நாம் செயற்பட்டுவருகின்றோம் - ஈ.பி.டி....
ஏற்றுமதித் துறையில் வளர்ச்சி!
பருவப்பெயர்ச்சி காலநிலையில் அதிகரிப்பு !
|
|