எரிவாயு விலை மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம்?

Tuesday, July 17th, 2018

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு எரிவாயு நிறுவனங்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரம் கூடிய வாழ்க்கைச் செலவுக்குழுக் கூட்டத்திலும் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மாதம் 29 ஆம் திகதி சமையல் எரிவாயுவின் விலை குறைவடைந்தது. இருப்பினும் உலக சந்தையிலுள்ள விலை மட்டத்தை நோக்கும் போது சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் அந்நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. எனினும் இது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினர் கூறுகையில்:

விலை அதிகரிப்பு தொடர்பில் கருத்துக்கள், தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் எழுத்து மூலமான கோரிக்கைகள் எதுவும் இதுவரையில் எந்தவொரு நிறுவனத்தாலும் முன்வைக்கப்படவில்லை.

எழுத்து மூலம் வேண்டுகோள் விடுக்கப்படும் சந்தர்ப்பத்திலேயே இது தொடர்பில் கருத்தில் கொள்ளப்படும் எனக் கூறியுள்ளது.

Related posts: