எம்.பி.க்கள் குறித்து விபரம் திரட்டும் பெப்ரல்!
Tuesday, May 9th, 2017இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் யாரென அறிவதற்காக, 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களைத் திரட்டும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (பெப்ரல்) அமைப்பு தெரிவித்துள்ளது.
தகவலறியும் சட்டத்தைக் கொண்டு, இந்தத் தகவல்களைத் திரட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அவ்வாறான, இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட மக்கள் பிரதிநிதிகள் இருப்பின், அவர்கள் தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்தவுள்ளதாகவும்அவ்வமைப்பின் தலைவர் ரோஹண ஹெட்டியாரச்சி மேலும் தெரிவித்தார்.
Related posts:
மேலும் 07 அமைச்சர்கள் பதவியேற்பு!
இலங்கை வருகிறார் அஹமட் ஷஹீட்!
பொய்யான பிரச்சாரங்களை பரப்பி வருகின்றனர் - கோட்டாபய ராஜபக்ஷ!
|
|