எந்தவொரு ஊடக நிறுவனத்தின் அனுமதிப் பத்திரத்தையும் இரத்துச் செய்யும் சட்டத்தில் தலையிடப் போவதில்லை – அமைச்சர் பந்துல குணவர்தன உறுதிபடத் தெரிவிப்பு!

Wednesday, October 5th, 2022

தாம் ஊடக அமைச்சில் இருக்கும் வரை எந்தவொரு ஊடக நிறுவனத்தின் அனுமதிப்பத்திரத்தையும் இரத்துச் செய்யும் சட்டத்தில் தலையிடப் போவதில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேம்பட்ட ஊடகக் கலாசாரத்தை உருவாக்குவதற்காக அனைத்து ஊடக நிறுவனங்களுடனும் ஒன்றிணைந்து சர்வதேச மட்ட ஊடக கலாச்சாரத்தை உருவாக்குவதற்கான சூழலை உருவாக்கவுள்ளதாகவும், அடக்குமுறை அல்லது ஒதுக்குதல் தொடர்பான ஆணைகளை அமைக்க முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அப்படியிருந்தும், சில சமூக ஊடகங்கள் மூலம் மோசமான விஷயங்கள் நடக்காமல் தடுக்க நடைமுறைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: