எதிர்வரும்14 ஆம் திகதி நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய மஹோற்சவம் ஆரம்பம்!
Monday, June 11th, 2018நயினாதீவு நாகபூ~ணி அம்மன் கோவில் 2018 விளம்பி வருட மஹோற்சவ விஞ்ஞாபனம் எதிர்வரும் 14 ஆம் திகதி வியாழக்கிழமை நண்பகல் 12 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 16 நாட்கள் திருவிழா நடைபெறும்.
இதில் எதிர்வரும் 22 ஆம் திகதி சர்ப்பத் திருவிழாவும் மறுநாள் 23 ஆம் திகதி திருமஞ்சமும் 26 ஆம் திகதி பகல் கைலைக்காட்சியும் இரவு சப்பரமும் மறுநாள் 27 ஆம் திகதி புதன்கிழமை தேர்த்திருவிழாவும் 28 ஆம் திகதி முற்பகல் 10.46 மணிக்கு கங்காதரணியில் தீர்த்தோற்சவமும் இடம்பெறும்.
அன்றைய தினம் இரவு திருவூஞ்சல், கொடியிறக்கம் இடம்பெற்று மறுநாள் 29 ஆம் திகதி தெப்போற்சவம் (பூங்காவனம்) இடம்பெறும் என ஆலய அறங்காவலர் சபை அறிவித்துள்ளது.
Related posts:
5 உடன்படிக்கைகள் சிங்கப்பூருடன் கைச்சாத்து!
எழுக தமிழ் கூட்டுப்பேரணிக்கு ஆசிரியர் சங்கம் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் பூரண ஆதரவு!
அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தெரியப்படுத்துங்கள்: மக்களுக்காக அரசாங்கத்தின் விசேட வேலைத்திட்டம...
|
|