உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் – உயர் நீதிமன்றம் நாடாளுமன்றத்திற்கு அறிவிப்பு!

Tuesday, September 5th, 2023

உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (05) நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது இதனை அறிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை கடந்த ஆகஸ்ட் 28 ஆம் திகதி முடிவடைந்தது. அதன்படி, இந்த தீர்ப்பு சபாநாயகருக்கு அனுப்பப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்தது.

தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளரான சதுரங்க அபேசிங்க உள்ளிட்ட இருவரால்  இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பாக, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது டுவிட்டர் கணக்கில் ஒரு குறிப்பைப் பதிவிட்டு, தேசிய கடன் சீரமைப்பு திட்டத்தை தாமதப்படுத்துவதன் மூலம், வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பை சீர்குலைக்க பல அரசியல் சக்திகள் செயற்பட்டதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

தடுப்பூசி நடவடிக்கையே இறப்பு விகிதம் குறைவடைய காரணம் - பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர்...
வகுப்பறையில் ஒரு மாணவனிடம் இருந்து மற்றுமொரு மாணவனுக்கு கொரோனா பரவும் அபாயம் மிகவும் குறைவு - லேடி ...
ஜனாதிபதி எடுக்கும் தீர்மானங்களை மதிக்கவேண்டும் – அவர் எடுக்கும் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்வேன் - பி...

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பொறுப்பு மற்றும் சவால்களை ஏற்க அரசாங்கம் தயார் - பிரதமர் மஹிந்...
சேதன விவசாயத்துக்கு மாறும் கடுமையான தீர்மானம் முழு எதிர்காலச் சந்ததியினருக்காகவும் எடுக்கப்பட்டுள்ளத...
எதிர்வரும் 18 ஆம் திகதிமுதல் தொடருந்து போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வர முடியும் - தொடருந்து திணைக்கள...