உரிய சேவைகள் கிடைக்காத நோயாளர்கள் சுகாதார அமைச்சிற்கு அறிவிக்குமாறு கோரிக்கை!
Monday, May 24th, 2021
அரச வைத்தியசாலைகளில் உரிய சேவைகள் கிடைக்காவிட்டால் அது குறித்து சுகாதார அமைச்சுக்கு அறிவிக்குமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் நோயாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சில நோயாளர்களுக்கு சில வைத்தியசாலைகளில் முறையான சிகிச்சைகள் வழங்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு தேவையான மருந்து வகைகள் உட்பட சகல வசதிகளையும் சுகாதார அமைச்சு ஏற்கனவே வழங்கி இருப்பதாக டொக்டர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எதிர்காலத்தில் பல நெருக்கடிகள் ஏற்படலாம் - புகையிரத தொழிற்சங்க ஒன்றிணைந்த சம்மேளனம்!
சர்வதேச வெசாக் தினத்தை முன்னிட்டு முத்திரை வெளியீடு
வன்முறையற்ற ஒன்றுகூடல் உரிமையை நிலைநாட்டுவதற்கு இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள...
|
|
|


