உரிமைகளை வென்றெடுக்க உறுதியுடன் உழைப்போம் – கரவெட்டியில் ஈ.பி.டி.பி!

Thursday, April 6th, 2017

கடந்த காலத்தில் நாம் பெற்ற அனுபவங்களையும் பாடமாகக்கொண்டு மக்களை ஒன்று திரட்டி வருங்காலத்தில் ஜதார்த்த பூர்வமாக அரசியல் பயணத்தை மேற்கொண்டு உரிமையை வென்றெடுப்பதற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி உறுதியுடன் பயணிக்கும்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கரவெட்டி பிரதேச நிர்வாக வட்டார ரீதியான கட்சி ஆதரவாளர்களுடனான விஷேட கூட்டத்தின்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டள்ளது.

எமது இனம் பலதரப்பட்ட போராட்டங்களுக்கு முகம் கொடுத்திருந்த போதும் அவை அனைத்தும் சிலரது தவறான வழிநடத்தல்களால்  அதன் இலக்கை எட்டாது கலைந்து சென்றுவிட்டது

ஆனாலும் எமக்கு கிடைத்திருந்த குறைந்தளவிலான அரசியல் அதிகாரங்களை நாம்  மக்களுக்கு சரியானதாகவே பயன்படுத்தியிருக்கின்றோம்.

அரசியல் உரிமைகளுக்கான தீர்வுகளை காண்பதில் பேரம்பேசும் அரசியல் பலத்தை எம்மிடம் மக்கள் வழங்குவார்கள். அதனூடாக நாம் தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க உறுதியுடன் உழைப்போம் என தெரிவிக்கப்பட்டது.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன், கரவெட்டி நிர்வாக செயலாளர் செந்தில்நாதன் ஆகியோருடன் கட்சியின் பிரதேச நிர்வாக முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பலரும்  கலந்துகொண்டிருந்தனர்.

Related posts: