உணவுப் பாதுகாப்பு தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Saturday, July 21st, 2018

இலங்கையின் உணவுப் பாதுகாப்பு மற்றும் போசனை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் உணவுத் திட்டம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.

இதனடிப்படையில் அரசாங்கத்துக்கும் உலக உணவுத் திட்டத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டு வரையான அரசாங்கத்தின் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்கும், 2018-2022 ஆண்டு காலப்பகுதிக்குள் நாட்டின் மூலாபாய வேலைத்திட்டத்திற்கும் அமைவாக உலக உணவுத்திட்டம் உதவிகளை வழங்கவுள்ளது.

நாட்டில் பட்டினிக்கலைவு போசாக்கூட்டல் உள்ளிட்ட அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு உலக உணவுத் திட்டம் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு பல்வேறு ஒத்துழைப்புகளை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:


ஈ.பி.டி.பியின் முயற்சியால் திருமலை சின்னத்தோட்ட குடியிருப்பாளர்களுக்கு 2017இல் நிரந்தர வீடுகள்!  
முழுங்காவில் கதிராவில் குளத்தால் ஏற்படவிருந்த பாரிய அழிவை தடுத்த அமைச்சர் டக்ளஸின் இணைப்பாளர் தவநாதன...
500 மில்லியன் ரூபாய் கிடைக்காத பட்சத்தில் அஞ்சல் மூல வாக்குகளுக்கு புதிய திகதி - தேர்தல் ஆணைக்குழுவி...