ஈ.பி.டி.பியின் முயற்சியால் நீர் வசதியின்றி அவதியுற்ற வறிய குடும்பத்திற்கு நீர் வசதிக்கான தீர்வு!

Thursday, October 25th, 2018

நீர் வசதியின்றி அவதியுற்ற வறிய குடும்பம் ஒன்றிற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் நீர் வசதி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது –

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் யாழ் பல்கலைக்கழகத்தில் தொழ்ல்வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்பட்ட ஊழியர்கள் ஒருதொகுதியினரே  தெல்லிப்பளை – கட்டுவன் மேற்கு பகுதியில் வாழும் குறித்த வறிய குடும்பத்தின் நிலைமையை உணர்ந்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உதவியுடன் நீர் பம்மி மற்றும் நீர்குழாய் பொருத்தி நீர் விநியோக வசதியை பெற்றுக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

44769741_1137348579737263_8432710244613750784_n 44717977_2080695841982236_7272814499097214976_n 43609976_2214880962120477_2970727882487234560_n 44742689_500637327076831_6652332818795855872_n 44737033_2256451997922175_2418799055665627136_n 44717952_2214880678787172_7939689479827095552_n

Related posts: