இலங்கையில் 2020ஆம் ஆண்டு புகைத்தலுக்கு முற்றாக தடை?

Wednesday, March 16th, 2016

எதிர்வரும் 2020ஆம் ஆண்டில் புகைப்பிடித்தலை முற்று முழுதாக தடை செய்ய சுகாதார, சுதேச வைத்திய மற்றும் போசாக்கு அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொற்றாத நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.இருதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம், புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு தொற்றாத நோய்கள் பரவுவதற்கு காரணமாகிய புகைப்பிடித்தலை முற்றாக தடை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

புகைப்பிடித்தலை முற்று முழுதாக தடை செய்யும் யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. தொற்றா நோய்கள் இலங்கையில் துரித கதியில் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் புகைப்பிடித்தலுக்கு தடை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொலனறுவை உள்ளிட்ட அரசாங்க வைத்தியசாலைகள் சிலவற்றில் இருதய சத்திர சிகிச்சைப் பிரிவுகள் உருவாக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, புகைப்பிடித்தலுக்கு முற்று முழுதாக தடை விதிக்கும் திட்டம் பற்றிய விபரங்களை அவர் வெளியிடவில்லை.

Related posts: