இலங்கையில் முதன்முறையாக மின்சார முச்சக்கரவண்டிகளை உற்பத்தி செய்யும் முழுமையான தொழிற்சாலை!
Saturday, March 9th, 2024இலங்கையில் முதன்முறையாக மின்சார முச்சக்கரவண்டிகளை உற்பத்தி செய்யும் முழுமையான தொழிற்சாலை திறக்கப்படவுள்ளது.
மருதானை புகையிரத திணைக்கள களஞ்சியசாலை வளாகத்திலேயே இந்த தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது.
வேகா பொறியியல் நிறுவனத்தினால் மருதானை புகையிரத களஞ்சியசாலை வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்ட மின்சார முச்சக்கரவண்டிகள் உற்பத்தி மற்றும் முச்சக்கரவண்டிகளை மின்சாரமாக மாற்றும் தொழிற்சாலை வளாகம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
இலங்கையிலேயே முழுமையாக உற்பத்தி செய்யப்படும் Vega நிறுவனத்தின் ELECTRIC முச்சக்கர வண்டியின் முழு உற்பத்தி செயல்முறையும் இந்த உற்பத்தி தொழிற்சாலை வளாகத்திலேயே மேற்கொள்ளப்படுகிறது.
Related posts:
துறைசார்ந்த தெரிவுகளை மேற்கொள்ளாமையே மாணவர்கள் கல்வியில் பின்னடைவை எதிர்நோக்கு காரணம்: வடமாகாண ஆளுந...
மாணவர்கள் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை சாதகமாக்கி பெருமை சேர்ப்பவர்களாக உருவாகவேண்டும் - ஈ.பி.டி.பியின...
இனி பலாலியிலிருந்து ஐரோப்பாவுக்கு பயணிக்கலாம்!
|
|