இலங்கையிலிருந்து பெங்களூருக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்!
Thursday, January 5th, 2017
இந்தியாவின் ஜெட் எயார்வேஸ் விமான சேவை நிறுவனம் இலங்கைக்கும் பெங்களூருக்கும் இடையிலான நேரடி விமான சேவையை இன்று முதல் ஆரம்பித்துள்ளது.
இதனடிப்படையில், தினமும் நள்ளிரவு 12.45 மணிக்கு இலங்கை வரும் ஜெட் எயார்வேஸ் விமானம் அதிகாலை 3.15 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பெங்களூர் நோக்கி புறப்பட்டுச் செல்லும்.
ஜெட் எயார்வேஸ் நிறுவனத்தின் இலங்கை முகவர் நிறுவனமாக ஜோன் கீல்ஸ் ஹோல்டிங் நிறுவனம் செயற்பட்டு வருகிறது.

Related posts:
தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத் தேர்த் திருவிழாவிற்குச் சென்ற சமயம் வீடுடைத்துத் திருட்டு!
ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்திப்பு - பொருளாதார மற...
28 கோடி ரூபாய் பெறுமதியான ஆணிகள் திருடப்பட்ட விவகாரம் - விசாரணைகள் ஆரம்பம் என அமைச்சர் பந்துல குணவர...
|
|
|


