இலங்கையின் மீட்சிக்குத் தொடர்ந்து ஆதரவு – IMF

Saturday, August 3rd, 2024

இலங்கை அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்ந்து மூன்று காலாண்டுகள் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி, குறைந்த பணவீக்கம், அதிகரித்த வருவாய் சேகரிப்பு மற்றும் கட்டியெழுப்புதல் ஆகியவற்றின் மீட்சிக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாக இன்று (2) IMF பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்

இலங்கையின் அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் பரந்த அடிப்படையிலான மற்றும் நிலையான பொருளாதார மீட்சியை உறுதிப்படுத்துவதற்கு சீர்திருத்த நிகழ்ச்சி நிரலில் தீர்க்கமான முன்னேற்றம் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுக்குழுவின் மூத்த அதிகாரி பீட்டர் ப்ரூயர்

“பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுதல் மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கு நிதி வருவாயை உயர்த்துவதற்கு மேலும் முயற்சிகள் தேவை,” என்று சுட்டிக்காட்டினார்.

2025 வரவு செலவுத் திட்டமானது,  இலங்கையின் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கான முக்கியத் தேவையான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3 சதவீதமான நடுத்தர கால முதன்மை இருப்பு இலக்கை அடைவதற்கு பொருத்தமான வருவாய் நடவடிக்கைகள் மற்றும் தொடர்ச்சியான செலவினக் கட்டுப்பாடுகள் மூலம் அடித்தளமாக இருக்க வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

000

Related posts: