இலங்கையின் சனத்தொகையில் 4 வீதமானவர்கள் நினைவு இழப்பு நோயால் பாதிப்பு – மனநல வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை!
Monday, August 28th, 2023
இலங்கையின் சனத்தொகையில் 4 வீதமானவர்கள் நினைவு இழப்பு எனப்படும் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மனநல வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வயோதிபத்துடன் மூளை செல்கள் அழிவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக மனநல வைத்திய நிபுணர் என் குமாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முறையான உணவுப் பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலமும், தொடர்ந்து உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலமும், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களை கட்டுப்படுத்துவதன் மூலமும் இந்த நிலைமையை குறைக்க முடியும் என மனநல வைத்திய நிபுணர் என் குமாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நான்காவது கொள்முதல் மாநாடு ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம்!
இலங்கையுடன் இணைந்து பணியாற்ற தயர் - சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு!
யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்குமாறு அதிகாரிகளுக்கு விவசாய அமைச்சர் பணிப்...
|
|
|


