இலங்கைக்குள் கடல்மார்க்க பயணிகளை தரையிறக்க தடை!

கொரோனா வைரஸ் தொற்று அவதானம் காரணமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் கப்பல் பயணிகளுக்கு இலங்கையினுள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இன்று(03) காலை சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்தார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இன்று தொடக்கம் பயணிகள் கப்பல்களின் பயணிகளை தரையிறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Related posts:
வாசகர்கள் அனைவருக்கும் EPDPNEWS.COM இணையத்தளத்தின் தைத்திருநாள் வாழ்த்துக்கள்!
ஊர்காவற்றுறைப் பிரதேசத்துக்கு எரிபொருள் நிரப்பு நிலையம் அமைத்துத் தரக் கோரிக்கை!
விற்பனை செய்யப்படுகின்றதா தேசிய ஊடகங்கள்?
|
|