இறுக்கமான பயணக் கட்டுப்பாடு – யாழ்ப்பாணத்தில் நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் : இருவர் படுகாயம்!

Monday, June 7th, 2021

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று ஒருவரை வீட்டுக்கு ஏற்றிசென்ற முச்சக்கர வண்டியும் யாழ்  நகருக்குள் நுழைந்த மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளாகியதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்துச் சம்பவம் இன்றுகாலை  யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் இடம்பெற்றுள்ளது

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற ஒருவரை, வீட்டுக்கு ஏற்றிசென்ற முச்சக்கர வண்டியும் அத்தியாவசிய தேவை நிமித்தம் யாழ்.நகருக்குள் நுழைந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் முச்சக்கர வண்டி சாரதியும் காயமடைந்துள்ளதுடன் சம்பவத்தில் முச்சக்கர வண்டியின் முன் பகுதியும் மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளன.

நாடு பூராகவும் பயணத் தடை அமுலில் உள்ள நிலையில் யாழ் நகரில் பொது மக்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. இந்நிலையிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: