இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் கன உலோகங்கள் இல்லை – பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Sunday, September 25th, 2022

கடந்த வாரத்தில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் கன உலோகங்கள் இல்லை என பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் 120 க்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

அனைத்து 35 மாதிரிகளிலும் கன உலோகங்கள் இருப்பது கண்டறியப்படவில்லை.

இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட சோள கொள்கலன்களும் பரிசோதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தெவேளை மீதமுள்ள மாதிரிகளின் சோதனை அறிக்கைகள் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

0000

Related posts: