இரு பேருந்துகள் கோர விபத்து: குவைத்தில் 15 பேர் பலி!
Monday, April 2nd, 2018குவைத்தில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 இந்தியர்கள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
தெற்கு குவைத் நகரில் அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அந்த தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்றும் எதிரில் வந்த பேருந்தும் நேருக்கு நேராக மோதிக்கொண்டன.
இந்த விபத்தில், 7 இந்தியர்களும், 5 எகிப்தியர்களும், 3 பாகிஸ்தானியர்களும் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் இந்தியர் ஆவார்.சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படையினர், விபத்துக்குள்ளான பேருந்துகளில் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
Related posts:
முன்னாள் ஜனாதிபதிக்கு உயர் பதவி வழங்கும் பங்களாதேஷ் !
கொரோனா வைரஸ்: மேலும் இருவர் ஐ.டி.எச் மருத்துவமனையில்!
பேக்கரி உற்பத்திகளுக்கான பாம் எண்ணெய் இறக்குமதிக்கு விசேட அனுமதிப்பத்திர முறை - வர்த்தக அமைச்சர் அறி...
|
|
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள ஆற்றுப்படுத்தல் வழங்கப்படவேண்டும் கிளி.மாவட்ட அரசாங்க அதிபர்...
யாழ் மாநகரின் நிர்வாகத்தில் யாரும் தலையிட முடியாது - ஈ.பி.டி.பியின் யாழ் மாநகர உறுப்பினர் றெமீடியஸ்!
நிதி நிறுவனங்களில் வைப்புச் செய்யும் பணத்தில் 6 இலட்சத்திற்கு மட்டுமே மத்திய வங்கி பொறுப்பு – அரசாங்...