இராசாயன  மருந்து மூலம் பழுக்க வைத்த பழங்களை விற்கும் வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை!

Thursday, June 16th, 2016

இராசாயன  மருந்து விசிறப்பட்டுப்  பழுக்க வைத்த பழங்களை விற்கும் வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாநகர சபையின் சுகாதாரப் பகுதியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பழ சீசன் ஆரம்பமாகியதையடுத்துப் பெரும் எண்ணிக்கையான பழங்கள் யாழ். நகருக்குத் தினமும் எடுத்து வரப்படுகின்றன. இதனையடுத்து யாழ். மாநகர சுகாதாரப் பகுதியினர் பழக் கடைகள் மீதான தமது சோதனை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். இந்த நிலையிலேயே மேற்கண்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts: