இரண்டு மாத காலப்பகுதி வீதி விபத்துக்களில் 450 க்கும் அதிகமானோர் பலி – பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு!

Monday, February 28th, 2022

இவ்வருடத்தின் இரண்டு மாத காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 450 க்கும் அதிகமானோர் வீதி விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் ஊடக பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ இதனை தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம் முதலாம் திகதிமுதல் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடு பூராகவும் 434 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். இதில் 457 பேர் உயிரிழிந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: