இரண்டு மாதங்களுக்குள் மருந்து தட்டுப்பாடு நிவர்த்திக்கப்படும் – சுகாதார அமைச்சர் அறிவிப்பு!

Saturday, April 8th, 2023

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் மருந்து தட்டுப்பாட்டை முழுமையாக நிவர்த்தி செய்வதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டி – பல்லேகலையில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நியாயமான விலைக்கு மருந்துகளை விற்பனை செய்யும் நடவடிக்கைக்கும் செல்ல வேண்டும்.

இதேவேளை, மக்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்கி, அரசியல் நோக்கத்தை நிறைவேற்ற செயற்படும் சில தொழிற்சங்க செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த, 90 சதவீதமானோர் ஒத்துழைப்பு வழங்குவதை, சமூக ஊடகங்கள் வாயிலாக தாம் பார்ப்பதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


ஜனாதிபதி செயலக பெயர்ப்பலகையை வாகனங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் - அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் ...
கிராம உத்தியோகத்தர் பணிப்புறக்கணிப்பு - தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் இடையூறு ஏற்படுமா என்ற சந்தேகம்...
நாட்டில் 2,000 வைத்தியர்கள் சுகாதார சேவைகளிலிருந்து விலகல் –  5,000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளிய...