இரண்டாவது நாளாக தொடரும் தொண்டராசிரியர்களின் போராட்டம்!
Tuesday, August 2nd, 2016
இரண்டாவது நாளாக இன்றும் வடமாகாண தொண்டராசிரியர்கள் யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ். கச்சேரியடியிலுள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக நேற்று (01) காலை முதல் இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
தங்கள் நியமனத்துக்கான பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள போதிலும் இதுவரை நியமனங்கள் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தே தொண்டராசிரியர்கள் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வட மாகாணத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டராசிரியர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தென்கொரிய வெளிநாட்டு அமைச்சர் இலங்கை வருகை!
எரிபொருள்களின் விலை குறைப்பு - பேருந்து, ஓட்டோ என்பனவற்றின் கட்டணம் 4 வீதத்தால் குறைப்பு!
எதிர்கால தலைமுறையினரை பாதுகாப்பதற்கு எதனையும் செய்து முடிப்பேன் – ஜனாதிபதி!
|
|