இரண்டாம் தவணைக் கட்டணமாக 97.3 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது!

Monday, January 15th, 2018

ஹம்பாந்தோட்டை துறைமுக முதலீட்டின் இரண்டாம் தவணைக் கட்டணமாக 97.3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி சீனாவின் சைனா மேர்ச்சண்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தினால் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த முதலீட்டு ஒப்பந்தத்திற்காக கடந்த வருடம் டிசம்பர் 9 ஆம் திகதி சலுகை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்ட அதேவேளை, அரச மற்றும் தனியார் வர்த்தக திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டத்தில் சைனா மேர்ச்சண்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் 389.46 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை இலங்கை துறைமுகங்கள் அதிகார சபைக்கு வழங்கியுள்ளது.

Related posts: